மாற்றுத்திறனாளிகளுக்கு இது கட்டாயம் – இல்லைனா ஸ்காலர்ஷிப் கட்!
இன்றைய கால கட்டத்தில் ஆதார் என்பது கட்டாயமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் ஆவணமானது லோன் பெறுவது முதல் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரீமெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது. 40 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான இயலாமை உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
PF கணக்கு வச்சுருக்கீங்களா? UAN நம்பர் பெறுவது எப்படி தெரியுமா?
உயர்தர கல்விக்கான உதவித்தொகை, ஐஐடி, ஐஐஎம் மற்றும் என் ஐ டி போன்ற முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது டிப்ளமோ அளவில் படிப்பதற்காக முழு நிதி உதவி வழங்கப்படுகிறது. தீனதயாள் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் இத்திட்டத்தின் மூலம் மன இறுக்கம், பெருமூளை வாதம், மனநலம் குன்றியவர்கள் மற்றும் பல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.இது போன்ற திட்டங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஆதார் கயட்டாயமானதாக கருதப்படுகிறது.
























