ஆதார் சம்பந்தமான சந்தேகங்கள் உண்டா? அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு!!
ஆதார் சம்பந்தமாக குறைகள் மற்றும் சந்தேகங்களை தீர்த்து கொள்ள UIDAI ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதன்படி இந்த வாரம் திங்கள் முதல் ஞாயிறு முடிய உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை
மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை அரசு, தனியார் போன்ற பல சேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன்படி ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்யும் வழிமுறைகள் தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை ஆதார் அட்டையுடன் இணைத்து கொள்ள முடியும். அதே நேரத்தில் தவறாக உள்ள சில தகவல்களை மாற்றி கொள்ள முடியும்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆதார் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதற்கு UIDAI ஒரு புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஆதார் சம்பந்தமான குறைகளை தீர்ப்பதற்கு ஆதார் Helpline உதவி செய்கிறது. உங்கள் கேள்விகளை தெரியப்படுத்த 1947 என்ற Tole Free எண்ணுக்கு போன் செய்யலாம் அல்லது [email protected] என்ற இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு இணையதள பதிவு – ஏப்ரல் 24 முதல் தொடக்கம்!!
இந்த சேவைகளை பயன்படுத்தி திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 11 மணி வரையும், ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் உங்கள் குறைகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த 1947 என்ற Tole Free எண் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட பதிமூன்று மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. அதில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.