இந்தியாவில் மே 8 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்தியாவில் வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
நாடு முழுவதும் கோடைகாலத்தை மறக்கும் விதத்தில் பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் – ரூ. 15,000 ஊதியம்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இது வருகிற மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் மழை அளவை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download