சாதனை படைத்தது சென்னை “வான்படை”சாகச நிகழ்ச்சி..!! “முழு தகவல் உள்ளே”..!!
இந்திய ராணுவ விமானப்படையின் 92 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் “வான்படை சாகச நிகழ்ச்சியானது இன்று கோலாகலமாக நடைபெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டு வந்தனர். இந்நிலையில், உலகத்திலேயே முதன்முதலாக ராணுவ விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக பார்வையாளர்களை கொண்ட சாதனை படைத்த நிகழ்ச்சியாக இது திகழ்வதால், லிம்கா புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























