ரூ.312 கோடியில் புதிய திட்டம்..700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிங்காப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய பல ஒப்பந்தங்களை தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக மேற்கொண்டுள்ளார்.
வேலைவாய்ப்பு:
சிங்கப்பூரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சிங்கப்பூர் இந்தியன் சேம்பர் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் சிங்கப்பூர் ஐடிஐ எடுகேஷன் சர்வீஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்கள் எஸ்கேப்.. பொதுமக்களுக்கான முக்கிய அப்டேட்!
இதனை தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐபி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாடு தொழில் வழிபாட்டு நிறுவனத்துடன் 312 கோடி மதிப்பிலான முதலீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஒப்பந்தங்களும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.