தமிழக முதல்வர் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக இன்று திருவண்ணாமலையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை:
தமிழகத்தில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
NPCIL ஆணையத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
அதன் அடிப்படையில் வேலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே முதல்வரின் வருகையை காரணமாக இன்று டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பறக்க விட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.