100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்வு – அம்பாசமுத்திரம் மாணவி தேர்வு!!
ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவாக பிப்ரவரி 7 ஆம் தேதி 100 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அந்த திட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவி முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 10 மாணவர்கள் கொண்ட குழு அமைத்து அவர்களுக்கு 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு குழுவில் ஒரு செயற்கைகோள் என 100 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து வானில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிரீம்11 ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை!!
இந்நிலையில் சென்னை நல்லோர் வட்டம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சென்னையில் 6 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஓசோன் அளவு, காற்றின் வேகம், கதிர்வீச்சு, விவசாயம் போன்றவற்றை கணக்கிட இந்த செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
‘தாலிக்கு தங்கம் திட்டம்’ – ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!
இந்த நிகழ்வு சிறந்த உலக சாதனையாக கருதப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெறும், மேலும் இந்திய சாதனை பதிவு அமைப்பு, ஆசியா சாதனை பதிவு போன்றவற்றில் இது இடப்பெற உள்ளது. விக்கிரமசிங்கபுரம் மாணவி முத்து இந்திய அளவில் வெளியிடப்படும் மாணவர் கடமை என்ற இணையதள புத்தகத்தின் ஆசிரியராக உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்