தமிழக கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியானது. ஊர்தி ஓட்டுநர் பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை |
பணியின் பெயர் | ஊர்தி ஓட்டுநர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 05-02-2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்கள்:
கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல்35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஓட்டுநர் கல்வி தகுதி:
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்க பட்டிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவும் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
ஊர்தி ஓட்டுநர் – ரூ.19500 – ரூ.62000/-
TN விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் Regional Head, Animal Husbandry Department, Pudugramam, Thoothukudi-628003 என்ற முகவரிக்கு பிப்ரவரி 05 அல்லது அதற்கு முன்னர் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நாளையொடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.