தமிழகத்தில் 9, 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கல்வி நிறுவனங்களையும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுக்கு உட்பட திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2021 வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
பின்னர் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் பிற வகுப்பு மாணவர்களுக்கும் விரைந்து பள்ளிகளை திறக்குமாறு தனியார் பள்ளிகள் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்களும் வெளியிடப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!
தமிழகத்தில் பிப்ரவரி 28ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி உள்ளிட்ட சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்