தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை அறிக்கை!!
கொரோனா தொற்று அச்சம் காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கொரோனா அறிகுறி குறித்த பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி அனைத்து ஆசிரியர்களும் கடந்த 18ம் தேதியே பள்ளிகளுக்கு வர உத்தரவிடப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் – தமிழக அரசிடம் கோரிக்கை!!
இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். வாரம் ஒருமுறை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அறிகுறி தென்படும் மாணவர், ஆசிரியர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
பள்ளிகளில் ஆய்வகங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
மேலும் இணை நோய்கள் உள்ள மாணவர்களை கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ள சுகாதாரத்துறை விட்டமின், ஜிங்க் மாத்திரைகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்