பள்ளிகளில் ஆய்வகங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அரசு வழங்கிய கணினி மற்றும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து பள்ளி முதல்வர்கள் ஆய்வு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்:
தமிழகத்தில் உள்ள 6029 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு சார்பில், கணினி மற்றும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய உயர் தொழிநுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகளில் 10 கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேல்நிலை பள்ளிகளில் 20 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
இந்நிலையில் கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மாணவர்களுக்கு தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் – தமிழக அரசிடம் கோரிக்கை!!
மேலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருந்தால் உடனடியாக L&T நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட Field Engineers-யை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் உடனடியாக சென்று சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை அந்தந்த பள்ளி முதல்வர்கள் ஆய்வு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்