தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஜன.8 வரை கருத்துக்கேட்பு கூட்டம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், பொங்கலுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் ஜனவரி 8ம் தேதி வரை பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரி, அசாம், பீகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் அது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இந்த வார இறுதிவரை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தெரிவித்து இருந்தார்.
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது இன்றியமையாத ஒன்று. எனவே பள்ளிகள் திறப்பு குறித்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் ஜனவரி 8ம் தேதி வரை கருத்து கேட்கப்படும். பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகளின் வசதிக்கேற்ப கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தலாம்.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டத்தை நடத்தி பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொகுத்து கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்