அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !!
தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு நீட் கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற கருத்துகள் அனைவரிடத்திலும் இருந்தது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.
7.5 சதவீத இட ஒதுக்கீடு:
கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் முந்தைய ஆண்டை விட அதிகமாக தேர்ச்சி பெற்று சாதித்தனர். எனவே இம்மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஆளுநரிடம் வைத்தார். இந்நிலையில் தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தேதி மாலை 5.00 மணிக்குள் இட ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழு ஒன்று அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பூர்த்தி செய்து தலைமை ஆசியரிடம் கையொப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயின்ற மாணவர்களை அந்தந்த பள்ளிகள் அனைத்திற்கும் சென்று ஆசியரிடம் கையொப்பம் வாங்க அலைய வைக்க கூடாது எனவும், மாணவர்களின் பெயர், முகவரி, தந்தை பெயர், வகுப்பு, மதிப்பெண் போன்றவற்றை சரிபார்த்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்