தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் ! – அண்ணா பல்கலை. அறிவிப்பு!!!
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று வரும் இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகளினை தொழில்நுட்ப பிரச்சனையால் எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற வேண்டிய இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டது. மற்ற 1,2 மற்றும் 3 ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இருமுறை நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து நேற்று ஆன்லைன் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 90 சதவிகித மாணவர்கள் ஆன்லைனில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வை தொழில்நுட்ப சிக்கலின்றி எழுதியுள்ளனர்.
இதனிடையே தொழில்நுட்ப கோளாறு மற்றும் இன்டர்நெட் சிக்கல் தொடர்பாக ஒரு சில மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்