2 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட்டில் பாடநூல், புத்தகப்பை !!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில இருக்கும் மாணவர்களுக்கு விலையில்லா இலவச பாடநூல் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக 2,3,4,5,7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது.
அரசு நடுநிலை பள்ளிகளிலும் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் பாடநூல், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவையாவும் வரும் 03.08.2020 அன்று முதல் செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நேரத்தில் 20 மாணவர்கள் என்ற ரீதியில் மாணவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பானது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |