காலை முதல் இரவு வரை தடையின்றி பால் விற்பனை – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் காலை 9 மணிவரை தான் பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர் சங்கம் அறிவித்து இருந்த நிலையில் ஆவின் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?
தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவரை 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. ரூ. 3780 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை முதல் சில்லறை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது என பால் முகவர் சங்கம் அறிவித்து இருந்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பம் !
தற்போது ஆவின் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் காலை முதல் இரவு வரை தங்குதடையின்றி அனைத்து ஆவின் பால் விற்பனை நிலையங்களிலும் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இருக்காது எனவும் கூறப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |