கொரோனாவை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பம் ! திறமையை காட்டும் அரசு !!!
இன்றைய சூழலில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கம் தனிமை படுத்தி வைத்துள்ளது. மேலும் அவர்கள் வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கண்காணிக்க மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இன்று இரண்டாம் நாள் – நிலைமை என்ன !!!
கொரோனா இருக்க கூடுமோ என்று தனிமை படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து, 492 ஆகும். இவர்கள் வெளியில் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அரசிடம் அறிவிக்காமல் வெளியே செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர்களை கண்காணிக்க தமிழக காவல் துறை சார்பில், ‘COVID – 19 Quarantine monitor’ என்ற, ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..! – வேகமெடுக்கும் கொரோனா
இதுகுறித்து மாநில, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது: தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரை கண்காணிக்க, அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ‘மொபைல் ஆப்’பில் அவர்களின் விபரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
தனிமையில் இருப்போர், வீட்டை விட்டு வெளியேறினால், அவர்களின் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணுடன், காவல் கட்டுப்பாட்டு அறை, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, ‘அலெர்ட்’ சென்று விடும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |