தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு இல்லை., பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். தற்போது கோடை விடுமுறை தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டப்படி வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியது பள்ளிக் கல்வித்துறை. மேலும் பள்ளியை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும், மின்சாதனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
























