ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த விஷயம் தெரியாமல் ரயிலில் பயணம் செய்யாதீங்க..!!
சாமானிய மக்களுக்கு உகந்த பயண முறையாக ரயில் போக்குவரத்து கருதப்படுகிறது. இதனால் மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் தேர்வு செய்கின்றனர். மேலும், இடையூரின்றி பயணம் மேற்கொள்ள IRCTC வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, தற்போது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. மறுபுறம், ரயில் நிலைய கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்குவதை இன்றும் பலர் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் கவுண்டர் முன்பதிவுகள் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள விலை வேறுபாடுகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
JIPMER நிறுவனத்தில் Project Associate I வேலைவாய்ப்பு 2025 – மாத ஊதியம்: ரூ.36,580/-
அதாவது, “ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் IRCTC ஒரு வசதிக் கட்டணம் வசூலிக்கிறது”. உதாரணமாக AC அல்லாத வகுப்புகளுக்கு ரூ.15 மற்றும் AC வகுப்புகளுக்கு ரூ.30 வசூலிக்கிறது. இதுவே டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் அல்லது UPI போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டண முறையை பொறுத்து, நுழைவாயில் கட்டண அல்லது வங்கியால் பரிவர்த்தனை கட்டணங்கள் விதிக்கப்படலாம். “இது போன்ற கூடுதல் கூடுதல் செலவுகளை தவிர்க்க விரும்புவோருக்கு அல்லது ஆன்லைன் கட்டணம் முறைகளை அணுக முடியாதவர்களுக்கு கவுண்டர் டிக்கெட் முறை உகந்ததாக இருக்கும்”. இந்த “ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணங்கள் முன்பதிவு உள்கட்டமைப்பை இயக்குதல், வாடிக்கையாளர் ஆதரவு சேவைகளைப் பராமரித்தல் மற்றும் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் செலவுகளை நிர்வகிக்க வசூலிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்”. இறுதியாக “ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவு முறையை தேர்வு செய்வது பயணிகளின் தேவைகளைப் பொறுத்தது. அதாவது, ஒரு சிறிய தொகையை சேமிக்க நினைத்தால் கவுண்டரில் முன்பதிவு செய்வது சிக்கனமானது. இதுவே வசதியாக பயணிப்பது முக்கியம் என்றால், ஆன்லைன் முன்பதிவு மிகவும் எளிய வழியாகும்”.


























