
+1 மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி.. தேர்வில் இந்த கேள்வி நம்பரை போட்டிருந்தாலே போதும்.. 2 மதிப்பெண் உறுதி..!!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. அதில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நிகழ்ந்தது. மேலும், தமிழகம் முழுவதும் 8.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்தேர்வு குறித்து அரசு தேர்வு துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, “11 ஆம் வகுப்பிற்கான கணினி அறிவியல் பொதுத்தேர்வில் 24-வது கேள்வியில் உள்ள வாக்கியங்கள் முரணாக உள்ள நிலையில், மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து, 24-வது கேள்விக்கு எந்த பதில் எழுதியிருந்தாலும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது”.























