
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஓய்வு காலத்தின் போது அதிக வருமானம் தரும் திட்டம்..!!
மக்கள் தாங்கள் நீண்ட காலமாக சேமித்த பணத்தை முதலீடு செய்து மாதாந்திர வருமானம் பெற பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களையே நம்பியுள்ளனர். ஆனால் பாரம்பரிய முதலீட்டு வழிகளான வங்கி ஃபிக்சட் டெபாசிட்கள் மற்றும் தொடர் வைப்புத்தொகைகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான வருமானம் அதிகம் கிடைக்கக்கூடும். அந்த வகையில் PNB MetLife இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தற்போது பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு ஒரு பெரிய அளவிலான தொகையை சேமிக்கவும் அதே சமயத்தில், ஆயுள் காப்பீட்டையும் பெறவும் முடியும்.
மேலும், எதிர்பாராத சூழ்நிலைகளின் போது, தங்கள் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பையும் வழங்க உதவுகிறது. இது குறித்து பேசிய பாலிசி பஜார் மற்றும் PNB MetLife நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரிகளான சஞ்சய் குமார் மற்றும் விவேக் ஜெயின் கூறியது, “PNB MetLife பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் மூலமாக பல முதலீட்டு யுக்திகளை செயல்படுத்த உள்ளோம். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்வத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். பாலிசி பஜார் உடனான இந்த பார்ட்னர்ஷிப் மூலம் அனைத்து செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஓய்வுகால திட்டமிடலை எளிமையானதாக மாற்றபட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

























