இனி ஆதார் அட்டைக்கு குட் பாய்..!! வெளியானது ஒரு சூப்பர் ஆப்…!!
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு நபரின் அடையாள ஆவணமாக திகழ்ந்து வருகிறது. மேலும், ஒருவர் இந்தியரா என்பதை உறுதி செய்வதில் ஆதார் அட்டை முதலிடம் வகிக்கிறது. மேலும், ஏதேனும் புதிதாக விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை கேட்கப்பட்டு, அதன் சரி பார்ப்பு செயல்முறை முடிவதற்கு வெகுநேரம் எடுக்கிறது. தற்போது இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக மத்திய அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமை தொகை குறித்து சற்று முன் வெளியான முக்கிய தகவல்…!! இனி பெண்கள் காட்டுல ஒரே மழை தான்..!!
அதாவது, இதற்கான பிரத்யோக ஆப்பை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆதார் சரிபார்ப்பானது UPI பரிவர்த்தனை போல எளிமையானதாக மாறும் என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆப் ஆனது அனைவரும் அணுகக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பேஸ் ஐடி மற்றும் ஏஐ தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய ஆதார் ஆப்பினை பேஸ் ஐடி மூலம் பயன்படுத்த முடியும் என்பதால் இனி எங்கு சென்றாலும் ஆதார் அட்டையை எடுத்து செல்ல தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
























