IPL 2025: தொடர் தோல்வியால் தடுமாறும் சென்னை அணி.. பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்..??
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் IPL தொடர் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான IPL தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், IPL தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். எனினும் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் “ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணிகள் 2025 தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றன. மேலும், 6 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது ரசிகர்களுக்கு பெரியளவில் ஏமாற்றம் அளித்துள்ளது. எனவே நடப்பு IPL தொடரில் சென்னை பிளே ஆஃப்-க்கு தகுதி பெற வேண்டுமென்றால் இனி விளையாடவுள்ள 8 போட்டிகளில் 7 கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளது”.


























