IPL 2025 CSK vs DC: இன்றுடன் விடைபெறுகிறார் தோனி.. இதுவே இறுதி போட்டி என தகவல்..!!
2025 ஆம் ஆண்டுக்கான IPL போட்டியானது கடந்த மார்ச் மாதம் 22 ம் தேதி தொடங்கியது. மேலும், பத்து அணிகள் இடையே 74 போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரானது மே 25, 2025 வரை நீடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதி கொள்கின்றன.
இந்நிலையில் “மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜுக்கு முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்றும், சென்னை அணியை தோனி வழிநடத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது சென்னை அணியின் கேப்டன் பதிவியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ருதுராஜ் தான் அணியை வழிநடத்தவுள்ளார் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.


























