
என்னது..சமைக்க தெரிஞ்சா ரூ. 50,000 நிதி உதவியா…?? பெண்களே இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க…!
சமூகத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் கால்தடம் பதித்து சாதனை படைத்து வருகின்றனர். மேலும், அரசும் அவர்களுக்கு பல்வேறு தொழில் கல்வி பயிற்சிகளையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்படுத்தி வரும் “அன்னபூர்ணா திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் நன்றாக சமைக்க தெரிந்த பெண்கள் புதிதாக கேட்டரிங் அல்லது பேக்கரி தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே இதுபோன்ற தொழில் செய்பவர்களுக்கும் அதிகபட்சமாக ரூ. 50,000 நிதிஉதவி கடனாக வழங்கி வருகிறது.
Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!
மேலும், இத்திட்டத்தில் கடன் தொகையை பெறுவதற்கு எந்தவிதமான பிணயமும் தேவையில்லை. குறிப்பாக, பயனாளர்கள் பெற்ற கடன் தொகையை மூன்று ஆண்டுகள் வரை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதேபோல், இந்த கடன் தொகையானது உணவு பொருட்கள், தொழில் தொடங்க தேவையான பொருட்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு ஆகிய வசதிகளை செய்து கொள்வதற்கு வழங்கப்படுகிறது. எனவே, சொந்தமாக கேட்டரிங் அல்லது பேக்கரி தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள SBI வங்கிக்கு நேரடியாக சென்று முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























