
மார்ச் 29 அன்று ரேஷன் கடை செயல்படுமா…?? தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்ட முக்கிய செய்தி
பொதுவாக ரேஷன் கடைகளில் மாத இறுதி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது. ஆனால், வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், அரசு ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும்.
மேலும், இந்த மாதத்தின் இறுதி நாளாக கருதப்படும் சனிக்கிழமை அன்றும் விடுமுறை அளித்தால், தொடர்ந்து 4 நாட்கள் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. அதனால், பொதுமக்களின் நலன் கருதி வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது























