
GPay, PhonePe மூலம் பண பரிவர்த்தனைகள் செய்பவரா நீங்கள்..? அப்போ NPCI விதித்த இந்த புதிய ரூல்ஸ் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
பேங்க் மூலமாகவோ அல்லது UPI ஆப்கள் மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்வதற்கு மொபைல் நம்பர்கள் மிக அவசியமான ஒன்று. அந்த வகையில் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளில் பல மொபைல் நம்பர்களை கொடுத்து மக்கள் பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். இதில் சிலர் மொபைல் நம்பர்களை பல மாதங்களாக பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தாமல் இருக்கும் மொபைல் நம்பர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது செயலற்ற அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட மொபைல் நம்பர்களை வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் நீக்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் UPI செயலி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீக்கப்பட்ட மொபைல் நம்பர்கள் அடங்கிய பட்டியலை வாராந்திர முறையில் புதுப்பிக்க கூறி வலியுறுத்தியுள்ளது. இதனால் ஏப்ரல் 1,2025 ஆம் தேதி முதல் நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் உள்ள செல்போன் எண்களில் UPI பரிவர்த்தனைகள் செயல்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























