
Champions Trophy 2025: IND vs AUS இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் விராட் கோலி படைத்த புதிய சாதனை..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமையில் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி டெஸ்ட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
அதாவது, துபாயில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இன் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 49 ஓவர்களில் 264 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் விராட் கோலி 84 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 45 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இப்போட்டியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் ஷிகர் தவானின் (10 போட்டிகளில் 701 ரன்கள்) சாதனை விராட் கோலி (17 போட்டிகளில் 746 ரன்கள்) முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.























