
மாணவர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்..!! தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் என்று தெரியுமா..
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த “மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்” என்ற இறைத்தூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்வதற்காக இந்தியா வந்த அவர் காரைக்காலில் தங்கி இருந்த சமயத்தில் இயற்கை எய்தினார் என கூறப்படுகிறது. மேலும், அவரின் “நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்”. இந்நிலையில் இந்த கந்தூரி விழா தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
“5 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த ரெப்போ வட்டி விகிதம்…!!” ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!
அதாவது, “புதுச்சேரி மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடப்பதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (08-02-2025) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வானது எந்தவித மாற்றமின்றி நாளை நடக்கும் என காரைக்கால் ஆட்சியர் டாக்டர் டி.மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

























