
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு கிடைக்கப்போகும் பரிசுகள்…!! ” இதை பற்றி தெரியாதவர்கள் உடனே பாருங்கள்”..!!
தற்போதுள்ள 2024ம் ஆண்டு நிறைவடைந்து, 2025 புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. மேலும், இப்புத்தாண்டு பண்டிகையை மக்கள் வெகு விமர்சையாக பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறி மிகவும் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். இதுமட்டுமின்றி, ஒரு ஆண்டு நிறைவடைந்து மற்றொரு ஆண்டு தொடங்கும் போது நடைமுறையில் இருக்கும் சில திட்டங்களில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், 2025 புத்தாண்டில் ஏற்படும் சில மாற்றங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். எனவே, உங்களுக்கு இதை தெரிவிக்கவே கீழே விரிவான கட்டுரையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
1.LPG கேஸ்: எண்ணெய் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் சிலிண்டர் விலையை மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், வணிக சிலிண்டர் விலை மட்டுமே அதிகரித்தது. அதன்படி, அடுத்த ஆண்டில் சமையல் எரிவாயு விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. EPFO பென்ஷன் வித்ட்ராவல்: EPFO அமைப்பானது PF பெறும் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக புதிய அறிவிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஜனவரி 1 முதல் நாட்டில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் PF தொகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதற்கு கூடுதல் செயல்முறைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
3. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்: அதாவது, அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அமேசான் பிரைம் வீடியோ புதிய விதிகளின் படி, ஜனவரி 1 முதல் Subscriber-கள் 5 டிவைஸ்களில் மட்டுமே லிங்க் செய்து கொள்ள முடியும். 2 TV உட்பட 2 சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்கு மேல் பயன்படுத்த முடியாது.
4. கார்களின் விலை அதிகரிக்கும்: தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில், பிரபல முன்னணி கார் நிறுவனங்கள் கார்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. அதாவது, ஹூண்டாய், மாருதி சுசுகி, மகேந்திரா, ஹோண்டா, பென்ஸ் மற்றும் ஆடி உள்ளிட்ட கார்களின் விலையை 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்க படுகிறது.

























