தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கபோவது என்ன? ” இதோ முழு தகவல் உள்ளே”..!!
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 2 தினங்களாக அவ்விடத்திலேயே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மாறி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.



























