
தொழில்நுட்பக் கோளாறால் சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு.. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சீரமைக்கப்பட்டது..
சென்னை சென்ட்ரலில் இருந்து விம்கோ நகர் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயில் நேற்று (23-12-2024) இரவு வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வு வழக்கமான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் இப்பிரச்னையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக இயக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரமைக்கப்பட்டு இன்று (24-12-2024) காலை 8.50 மணி முதல் வழக்கம் போல இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த தொழில்நுட்பக் கோளாறு சுமார் 10 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


























