இளைஞர்களே…25,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம்..!!” எங்கு அமையப் போகுது தெரியுமா”..??
உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருகிறது. மேலும், இந்த தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதால், வேலையில்லா திண்டாட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த தொழிற்சாலை ஒன்று அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தைவான் நாட்டை சேர்ந்த ‘ஹோங்ஃபு’ நிறுவனமானது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 1,500 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த தொழிற்சாலை மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























