
அரசு தேர்வாளர்களிடம் இருந்து வினாத்தாள்கள் பறிப்பு…!! ‘ அறைக்குள் திடீரென நுழைந்த ஒரு கூட்டத்தால் பரபரப்பு”..!!
நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு துறையிலும் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு தேர்வுகளை அந்தந்த மாநில அரசு தேர்வாணையங்கள் நடத்தி வருகிறது. மேலும், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 70-க்கும் மேற்பட்ட அரசு தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததாகவும், இதனால் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை பாதித்துள்ளதாகவும் சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல் பரவின. அதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது, பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பீகாரில் இன்று( டிசம்பர் 16) தேர்வு நடைபெற்று கொண்டிருந்த தேர்வறைக்குள் திடீரென நுழைந்த ஒரு கூட்டம், தேர்வாளர்களிடம் இருந்த விடைத்தாள்களை பறித்து சென்றுள்ளது.

























