ஆக்ரோஷ மழையால் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து…!! “தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு”..!!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 2 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தற்போது வலுவிழந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
மேலும், தொடர் கனமழை காரணமாக பல்வேறு போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஊட்டி இடையேயான ரயில் சேவைகள் 2 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


























