
செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்காது.. தனது அதிகாரங்களை பயன்படுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரை நியமித்த பிசிசிஐ தலைவர்..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) “ஜெய் ஷா” தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, பிசிசிஐ செயலாளர் பதவி காலியாக இருக்கும் நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரை தற்போது பிசிசிஐ, தற்காலிக செயலாளராக நியமித்துள்ளது. மேலும், பிசிசிஐ செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்காததால் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் BCCI தலைவர் விதிவிலக்காக இந்த முடிவை எடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
நீங்க ஒரு Missed Call கொடுத்த போதும்…பணம் உங்க கைக்கே வந்துரும்…!! ” இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா”..??
அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் “ரோஜர் பின்னி”, “தேவஜித் சைகியா “வை இடைக்கால செயலாளராக நியமித்துள்ளார். இதை தொடர்ந்து பிசிசிஐ விதிமுறைகளின் கீழ் நிரந்தர செயலாளர் நியமிக்கப்படும் வரை, சைகியா தற்காலிக செயலாளராக 2025 செப்டம்பர் வரை இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசாம் கிரிக்கெட் சங்கம் (ACA ) செயலாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சைகியா 2022 இல் BCCI யின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

























