ரூ.150 முதலீடு செய்தால் 7 லட்சம் வரை லாபம் பெறலாம்.. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள எல்.ஐ.சியின் சிறப்பு பாலிசி ..

0
??.150 ??????? ???????? 7 ?????? ??? ????? ???????.. ?????? ????????? ???????????? ???.?.?????? ??????? ?????? ..
ரூ.150 முதலீடு செய்தால் 7 லட்சம் வரை லாபம் பெறலாம்.. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள எல்.ஐ.சியின் சிறப்பு பாலிசி ..

ரூ.150 முதலீடு செய்தால் 7 லட்சம் வரை லாபம் பெறலாம்.. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள எல்.ஐ.சியின் சிறப்பு பாலிசி ..

நீங்கள் சேமித்த நீண்ட கால நிதியை பாதுகாக்க ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் எல்.ஐ.சி. திட்டங்கள் பல குழந்தைகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் “எல்.ஐ.சி. ஜீவன் தருண் பாலிசி” திட்டம் குழந்தைகளுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு பலன்களை வழங்குகிறது.

அதாவது  எல்.ஐ.சி. ஜீவன் தருண் திட்டம், குழந்தைகளின் அதிகரித்து வரும் மருத்துவ மற்றும் கல்வித் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் குழந்தையின் வயது குறைந்தது மூன்று மாதங்கள் முதல்  அதிகபட்சம் பன்னிரண்டு வயதுக்குள் இருக்க வேண்டும். இதுவே,  இளைஞர்கள்  20 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் முழுமையாக முதலீடு செய்து கொள்ளலாம்.

இதை தொடர்ந்து இந்த பாலிசியில்  குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்யலாம். மேலும் இதற்கென உச்சவரம்பு எதுவும் இல்லை.  குழந்தைகளுக்கு 25 வயது ஆனவுடன் மொத்தப் பணத்தைக் கோரலாம். இந்த திட்டத்தில்  நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் டெபாசிட் செய்து  கொள்ளலாம். மேலும் இந்த கவரேஜ் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.150 செலுத்தினால், ஆண்டு பிரீமியம் ரூ.54,000 இருக்கும். அந்த வகையில் 8 ஆண்டுகள் செலுத்தினால் ரூ.4.32 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும். மேலும் இதற்கான போனஸ் தொகையாக ரூ.2.47 லட்சம்  எல்.ஐ.சி.யால் வழங்கப்படும். 25 வயதிற்கு பின்னர் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என  எல்.ஐ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!