“நான் அரசியல் சூப்பர் ஸ்டார்… ரஜினியை சந்தித்ததால் நான் சங்கியா..?” சீமானின் பேச்சால் பரபரப்பு..
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் இயக்குனர் சீமான், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு சர்ச்சையாக மாறியது. இந்நிலையில், இதுகுறித்து, நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம்-2 புதிய அப்டேட்..!! “மத்திய அரசு நிதி வழங்க தயார்”..!!
அதாவது, நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எனக்கு காவியை போர்த்தி சங்கியாக்க பாக்குறீர்கள்.எனக்கு எந்த உடை போட்டாலும் Fit ஆகும். ஆனால், காவி not fit for myself.it‘s very bad, very ugly and i hate it.” எனவும், “ரஜினியை சந்தித்தால் நான் சங்கியா?, நானும் ரஜினிகாந்தும் என்ன பேசினோம் என எங்களுக்கு தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை, அவருக்குமில்லை” என்று கூறியுள்ளார். மேலும், “ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார்; நான் அரசியல் சூப்பர் ஸ்டார்; இரண்டு ஸ்டாரும் இணைந்ததால் பயந்துவிட்டனர்” என கூறியுள்ளார்.


























