மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி?? வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஆனது கடந்த வாரம் முதல் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திர அருகில் கரையை கடந்ததை நாம் அறிவோம்.
மதுரையில் நாளை (19.10.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!
இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























