மாறப்போகுது ரூல்ஸ் எல்லாம்….உடனே தெரிஞ்சுக்கோங்க!
இன்றைய கால கட்டத்தில் வங்கி என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் பணம் டெபாசிட் செய்யவும், தேவைப்படும் போது எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. இந்திய முழுவதும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. சிறு பொருள் முதல் பெரிய பெரிய பொருட்கள் வரை எது வாங்கினாலும் QR கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இனி பணம் செலுத்த புதிய பணப் பரிமாற்ற விதிகள் அமல்படுத்த உள்ளது.
டாடாவின் புதிய மியூச்சுவல் ஃபண்ட் – முழு விவரங்களுடன்!
இந்த விதிகள் மூலம் பேங்க் அக்கவுண்ட் (Bank Account), மொபைல் நம்பர் (Mobile Number) மற்றும் பேங்க் கிளை (Bank Branch) விவரங்கள் மட்டுமல்லாமல் கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட இருக்கிறது. அதாவது, மேற்கண்ட விவரங்களுக்கு பிறகு கஸ்டமர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் அந்தந்த வங்கிகளால் சேகரிக்கப்பட இருக்கிறது. ஆதார் வெரிஃபிகேஷன் (Aadhaar Verification) அல்லது ஃபிங்கர் பிரிண்ட் (Fingerprint) போன்ற கூடுதல் அங்கீகாரம் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, பேங்க் மூலம் பணம் அனுப்பும் போது, உங்கள் ஃபிங்கர் பிரிண்ட் அல்லது ஆதார் வெரிஃபிகேஷன் விவரங்களும் கேட்கப்படலாம்.


























