முதலீடு செய்யணும்னா இது தான் பெஸ்ட் – இரட்டிப்பாகும் முதலீடு!
தற்போதைய கால கட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் என பல்வேறு காரணத்திற்காக முதலீடு செய்து வருகின்றனர். இதில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகம் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்பதே. முதலீடு செய்பவர்களுக்கு கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைக்கும். .
பர்சனல் லோன் வாங்க போறீங்களா..?? அதுக்கு முன்னாடி இத மட்டும் செக் பண்ணிட்டு போங்க..!!
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சார்பாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் பெரும் முதிர்வுத் தொகைக்கு வரி விதிக்கப்படும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. எனவே ரூ.10 லட்ச ரூபாயை முதலீடு செய்யும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டில் 20 லட்சமாக பெற்றுக்கொள்ள முடியும்.



























