TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் பொது தமிழ் பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. பாந்தள் உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் _________ என்பதாகும்.
(A) கரடி
(B) யானை
(C) முதலை
(D) பாம்பு
விடை : (D)
2. “விற்பெருந் தடந்தோள் வீர!”
இப்பாலடி யாரைக் குறிக்கிறது?
(A) இலக்குவன்
(B) இராமன்
(C) குகன்
(D) அனுமன்
விடை : (B)
3. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
(A) நம்மாழ்வார்
(B) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
(C) குலசேகராழ்வார்
(D) திருமங்கையாழ்வார்
விடை : (B)
பிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக லாபம் தரும் வங்கிகள் எது தெரியுமா? முழு விவரங்களுடன்!
4. ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
(A) பேயனார்
(B) கபிலர்
(C) ஓதலாந்தையார்
(D) ஓரம்போகியார்
விடை : (A)
5. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்
(A) நந்திவர்மன்
(B) ஜெயங்கொண்டார்
(C) குமரகுருபரர்
(D) பெயர் தெரியவில்லை
விடை : (D)


























