ஓசூரில் விரிவடையும் “செல்போன் தொழிற்சாலை”…!! ” 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!
தமிழக முதல்வரின் தொடர் முயற்சியால், தமிழ்நாடு தொழில் நகரமாக மாறி வரும் நிலையில், தற்போது ஓசூரில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் செய்யப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஓசூரில் ஏற்கனவே ரூ. 3150 கோடி மதிப்பீட்டில் 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஆலை இயங்கி வரும் நிலையில், தற்போது மேலும், ரூ. 3699 கோடி முதலீட்டில் 5 லட்சம் பரப்பளவில் அதனை விரிவாக்கம் செய்ய உள்ளதாக டாடா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது . மேலும், இங்கு APPLE IPHONE-களை உற்பத்தி செய்யப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது தினசரி 92,000 செல்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து, 2 லட்சமாக எண்ணிக்கையை உயர்த்துவதற்காக விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது.


























