கடன் வாங்கும் நபரா நீங்கள்..? மோசடியில் இருந்து தப்பிக்கணுமா.. அப்போ இது உங்களுக்குத்தான்…
இந்தியாவில் வாழும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், தற்போது கடன் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடன் மோசடிகளும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நடக்கும் கடன் மோசடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்:
1. கடன் வழங்கும் நபரின் முழுமையான விவரம் மற்றும் கடன் வழங்குபவர் இந்திய ரிசர்வ் வங்கியில் ஏதேனும் அங்கீகாரம் பெற்றவரா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளவும்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இத்தனை வகைகளா ..!!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
2. கடன் வாங்கும் நபரிடம் வழங்கும், கடன் ஒப்பந்த ஆவணங்களை கவனமாக படிக்க வேண்டும். இதில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும்.
3.உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குநர்கள் மோசடிக்காரர்களாக இருக்க நேரிடும். ஆகையால் அவர்களிடம் ஆவணங்களை வழங்குவதற்கு முன்னாள் தீர விசாரிக்க வேண்டும். மேலும், இத்தகைய வழிமுறைகள் கடன் மோசடிக்காரர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும்.


























