மைசூரு தசரா திருவிழா இந்த தேதி முதல் தொடக்கம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி வரலாற்று சிறப்பு மிக்க மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த நிகழ்வில் வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இதனால் மைசூர் தசரா விழா உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் தசரா விழா குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு!!

அதில் கர்நாடகாவில் அக்டோபர் 3ம் தேதி துவங்கும் தசரா விழா, அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். வறட்சியின் காரணமாக, கடந்தாண்டு தசரா விழா பாரம்பரியத்துடன் மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்தாண்டு தசரா விழா மிகவும் விமர்சையாக கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


























