எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு குறைந்த சில்லறை வர்த்தகம்! – கவலையில் விற்பனையாளர்கள்!
சில்லறை வர்த்தகம் என்பது பொதுவாக மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பொருள்களை மொத்தமாக விலைக்கு வாங்கி, அவர்கள் லாபத்திற்காக சிறிது விலை உயர்த்தி சிறிய அளவில் விற்கப்படுவதாகும். இதில் காய்கறி வியாபாரிகள் போன்றவர்கள் அடங்குவர். இவ்வாறு சில்லறை வர்த்தகம் நம் நாட்டில் அனைத்து பகுதிகளில் நிறைந்துள்ளது. இத்தகைய சில்லறை வர்த்தகமே விற்பனையாளர்களையும் பொதுமக்களையும் இணைக்கும் நாட்டின் வர்த்தக அச்சாணி ஆகும்.
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள் … டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !!
தற்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சில்லறை வர்த்தக பணவீக்கம் 4% கீழ் இறங்கி இருந்தது. ஆனால், அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளும் தொடர்ந்து உயர்ந்தே இருந்தது சில்லறை வர்த்தகம். இந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 5.08 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தகம் தற்போது எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதத்திற்கான சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.54% ஆக குறைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சில்லறை வர்த்தகம் 7 சதவீதத்திற்கும் மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

























