ரேஷன் கார்டு இல்லையா? ரூ.6000 நிவாரணம் பெற உடனே இதை பண்ணுங்க!!
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் நிவாரணத்தொகை பெறும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நிவாரணத்தொகை:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு டிச.17 ஆம் தேதி முதல் நிவாரணத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், அதிகாரிகள் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணத்தொகைக்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத்தொகை கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்கள் மிக கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
இவ்வாறு, ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு விண்ணப்பம் வழங்கப்படும். அதில், கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் அடங்கிய 11 விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விவரங்களின் அடிப்படையில் தகுதியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.