தீபாவளி தினத்தில் புதிய மாற்றம் – அரசின் உத்தரவால் பொதுமக்கள் குழப்பம்!!!
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு நவ.12க்கு பதிலாக நவ.13ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவிடுமுறை:
தீபாவளி பண்டிகை நவ.12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தற்போது இருந்தே பட்டாசு மற்றும் துணி விற்பனை களைகட்டி கொண்டிருக்கிறது. மேலும், தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்துள்ள நிலையில் 1 நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக பள்ளிகளுக்கு நவ.13 ஆம் தேதியும் கூடுதலாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவ.12 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மாநிலத்தில் அறிஞர்களின் ஆலோசனைப்படி நவ.13 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து மாநிலத்திலும் நவ.12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஆத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் விடுமுறையை மாற்றியது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.