மக்களுக்கு சிறந்த 5 சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!
இந்தியாவில் மக்கள் பணத்தை சேமிப்பிக்க அரசு பல சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி அதிக நன்மை தரும் 5 முதலீட்டு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டங்கள்:
இன்றைய சூழ்நிலையில் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்திற்காக மக்கள் பணத்தை சேமிப்பது முக்கியமானதாகும். அந்த வகையில் அரசு பல சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி சிறந்த 5 முதலீடு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இந்த திட்டமானது அரசாங்க ஓய்வூதிய முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் எந்தவித அச்சமும் இன்று முதலீடு செய்யலாம். மேலும் நீண்ட கால சேமிப்பிற்கு ஏற்ற திட்டமாகும். இதில் தற்போது 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்த இந்த திட்டத்தை தொடங்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (Pubilc Provident Fund) :
இந்த திட்டமானது எளிய மக்களுக்கு உதவக்கூடிய திட்டம் ஆகும். இதில் 7.1 சதவீதம் நிலையான வட்டி விகிதம் இருக்கிறது. மேலும் குறைந்தபட்சம் ரூ. 500 செலுத்தி மக்கள் கணக்கை தொடங்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்
இந்த திட்டமானது பெண் முதலீட்டாளர்களுக்கு தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இதில் வட்டி விகிதம் 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்சம் ரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். மேலும் வட்டி பணம் காலாண்டுக்கு ஒரு முறை அல்லது பகுதியளவு திரும்ப பெறும் வசதி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மர்ம காய்ச்சல் – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருமா??
தபால் நிலைய ஃபிக்ஸ்டு டெபாசிட்
இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். மேலும் இதில் உங்களது பணத்தை குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். அதே போல திட்டத்தின் வட்டியானது வங்கிகளை விட அதிகமாக இருக்கிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ்
இந்த திட்டம் NSC என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது. இது 5.6 வருட முதலீட்டு காலத்தை கொண்டுள்ளது. மேலும் 6.8 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.