வங்க கடலில் வலுப்பெறும் புயல்.. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தீவிர புயலாக வலுப்பெறவுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தின் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தாழ்வு பகுதி ஆனது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என்றும் நாளை அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 14 ஆம் தேதி அன்று புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – ரூ. 27500/- ஊதியம்!
இதனால் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் மிதமானது முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்பதால் வெப்ப அழுத்தம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இன்று முதல் 12 ஆம் தேதி வரை அந்தமான் கடப்பகுதிகளில் காற்று 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது தொடர்ந்து மே 14ஆம் தேதி வரை உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download